Maha Sivaraththiri-2020
Updated Date: 17 February 2020
மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தில் மகா சிவராத்திரப் பெருவிழா 21-02-2020 ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
அங்கு கேதீஸ்வர பெருமானுக்கு திருமுழுக்கு(அபிடேகம்)பூசை, அர்ச்சனை நிகழ்வுகளும், சிறப்பு நிகழ்சசிகளும் அலங்கார மண்டபத்தில் நடைபெறும்.
மகாலிங்கப் பெறுமானுக்கு வழமைபோல் பாலாவித் தீர்த்தத் திருமுழுக்கு செய்யவும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
நான்கு யாமங்களிலும் திருமுழுக்குப் பூசைகள் இடம்பெறும்
நள்ளிரவு 12.15க்கு இலிங்கோற்பவ பூசை இடம்பெறும்.
இவ் மகாசிவராத்திரி பூசைக்கு இலங்கையில் எல்லா பாகத்திலிருந்தும் மக்கள் சார சாரீயாக வருவார்கள்.
இலங்கையில் உள்ள ஈஸ்வர தலங்கலில் பெருமை வாய்ந்ததாகும்.
இவ் விழாவுக்கு சிவனடியார்கள் அனைவரையும் திரண்டு வருமாறு திருக்கேதீச்சர ஆலயத் திருச்சபையினர்பணிவாக வேண்டுகோள் செய்கின்றார்கள்.
இவ் சிவராத்திரி திருவிழாவுக்கு உரிய எல்லா ஏற்பாடுகளையும் மன்னார் அரசாங்க அதிபர் திரு.சி.ஏ.மோகனதாஸ் அவர்களால் செய்யப்பட்டுள்ளது.
www.tamilthakaval.org
