அமரர் விசுவநாதர் கைலாசபிள்ளையின் இரண்டாவது ஆண்டு நினைவு
23.02.2019
பமபலபிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நாளை நடைபெறும் அகில இலங்கை இந்து மாமன்ற முன்னாள் தலைவர் அமரர் வி.கைலாசபிள்ளையின் இரண்டாவது ஆண்டு நினைவுப் பேருரையில் கலந்துகொள்ள தமிழ்நாடு முனைவர் வே.சங்கரநாராயணம் அவர்கள் நேற்று இலங,கை வந்தடைந்தார்.
அவரை விமான நிலையத்தில் மாமன்ற உபதலைவர் சி.தனபாலா,வைத்தய கலாநிதி ஆ.சிவசோதி ஆகியோர் வரவேற்றனர்.
இவர் பெரியபுராணம் கூறும் வாழ்வியல் எனும் பொருளில் உரையாற்றுவார்.இவரின் தொடர் சொற்பொழிவு மலையகம்,கிழக்கு,வன்னி மற்றும் யாழ்ப்பாணப் பகுதிகளில் நடைபெறவுள்ளது.
மாமன்றத்தின் முன்னாள் தலைவர் அமரர் விசுவநாதர் கைலாசபிள்ளையின் இரண்டாவது ஆண்டு நினைவுப் பேருரை நிகழ்வு இன்று சனிக்கிழமை மாலை கொழம்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபததில் நடைபெறவுள்ளது.
மாமன்றத் தலைவர் மா.தவயோகராஜா தலைமையில் நடைபெறும்.இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக அருள் நிறை அராத்மானந்த சுவாமி(கொழும்பு இராமகிருஸ்ணமிஷன் தலைவர்),சிறப்பு அதிதியாக கலாநிதி ஆறு.திருமுருகன்(உப தலைவர் அகில இலங்கை இந்து மாமன்றம்)
www.tamilthakaval.org
