Mrs. Alakaiya Niranjani
Date of Birth: 25 April 1956 - Deceased: 06 January 2026
இல- 23 யாழ் வீதி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அழகையா நிரஞ்சனி அவர்கள் 06-01-2026 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன் - சரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு புதல்வியும்,
அழகையா அவர்களின் அன்பு மனைவியும்,
மயூரன் (கனடா), கவிதா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரதிவிராஜ், சியாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயந்திரன் அவர்களின் அன்பு சகோதரியும்,
ரஞ்சினி அவர்களின் அன்பு மைத்துனியும்,
சண்முகநாதன், காலஞ்சென்றவர்களான ராஜதுரை, பத்மநாதன், நடராஜ், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகளும்,
ரோஜி, நிஷாந்தி, நிரோஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரணவி, நிஹாரிகா, துருவன், ருத்ரன் ஆகியோரின் அன்பு பாட்டியும்,
அதுஷா, சஹானா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
