திரு. அல்பர்ட் பார்ண்ஸ்
தோற்றம்: 10 அக்டோபர் 1947 - மறைவு: 31 மே 2026
"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்." யோவான் 11:25
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு - தன்னாமுனையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. அல்பர்ட் பார்ண்ஸ் அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோன் பாண்ட்ஸ் - மேரி பாண்ட்ஸ் தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான ஆரோக்கியம் - மரிசிலியா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
அல்பர்ட் பாண்ட்ஸ் இருதய ராணி அவர்களின் அன்பு கணவரும்,
வரப்பிரகாசம், கிளமன்ட் பாண்ட்ஸ், கரோலினா, கலிஸ்டா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அபிக்க்ஷாரிசன், அபி ஷாஸான், அபி ஜோசியா, ஹரிஷ் விஜய், பிரவின்ஞ்ஞா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,
யனிஷ்கா, சுசானா, ஒசாலினா ஸ்டெபினோபான்ஸ், பிரித்திக் ரோஷய் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் சரீரம் 01-06-2026 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் தன்னாமுனை உயிர்ப்பின் உறைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
✝️✝️✝️✝️✝️
தொடர்புகளுக்கு:
+94 74 335 3825
www.tamilthakaval.org
