திருமதி. அல்லிராணி இராசையா (ராசு மாமி)
தோற்றம்: 19 நவம்பர் 1938 - மறைவு: 20 டிசம்பர் 2024
யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், நுணாவில், உரும்பிராய் கிழக்கு, ஜேர்மனி- Bremen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அல்லிராணி இராசையா அவர்கள் 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை (வாத்தியார்) - நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
செல்லையா - பாக்கியம் தம்பதியினரின் மருமகளும்,
இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பாலமுரளி, பாலகிருஷ்ணன், பாலகௌரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜயரூபன், காலஞ்சென்ற ராசலக்சுமி ஆகியோரின் அன்பு மாமியும்,
பிரசாத், நிரோஜினி, அஸ்வினி, பிரசாந்தி, நிசாந்தினி, நிசாந், ரூபிகா, கௌசிக், கிசோர் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மாயா, மீனா, அரீசா, அமாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, குலசேகரம், முத்துரதி, சிரோன்மணி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற அமிர்தம்மா, வேலாயுதம், சிவசோதி, இராஜேந்திரம், அருள்சோதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-12-2024 திங்கட்கிழமை முற்பகல் 10:00 - 1:00 மணிவரை (Beerdigungsinstitut Stühmer Wilmannsberg 2, 28757 Bremen, Germany) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
