திரு ஆழ்வார் செல்லத்துரை
(ஓய்வுபெற்ற மக்கள் வங்கி முகாமையாளர்)
தோற்றம்: 11 மே 1941 - மறைவு: 22 ஜூலை 2022
யாழ். வடமராட்சி நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், முடக்காடு வீதி, சாமியன் அரசடியை வதிவிடமாகவும் கொண்ட ஆழ்வார் செல்லத்துரை அவர்கள் 22-07-2022 வெள்ளிக்கிழமை அன்று வராத்துப்பளை புலோலியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆழ்வார் தெய்வானை தம்பதிகளின் மூத்த மகனும்,
சிதம்பரப்பிள்ளை லட்சுமி தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற செல்லத்துரை யோகம் அவர்களின் அன்புக் கணவரும்,
இளம்பிறைநாதன்(யாழ்.மாநகரசபை), பிரணவநாதன்(இலங்கை நிர்வாக சேவை), சத்தியபாமா(லண்டன்), சசிகலா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திருமகள்(இலங்கை), கிருஸ்ணராசா(லண்டன்), சிந்துஜா(ஆசிரியை), பிரபாகரன்(பிரகாஷ்- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, இராசதுரை, சிவஞானம், இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கந்தசாமி(சட்டத்தரணி), சின்னம்மா, திலகவதி, லட்சுமி, பார்வதி, காலஞ்சென்ற அம்மா ஆகியோரின் மைத்துனரும்,
திலோத்தமா, சங்கனி, ஆசினி, ஹரீஸ், துளசி, அவ்வை, கல்கி, துஷா, அகிர்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-07-2022 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் வராத்துப்பளை புலோலியில் அமைந்துள்ள அவரது மகனது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
www.tamilthakaval.org
