திரு. அம்பலவாணர் கிருஷ்ணர்

(இளைப்பாறிய உதவி விவசாய பணிப்பாளர் - வவுனியா)

அம்பலவாணர் கிருஷ்ணர்

தோற்றம்: 16 நவம்பர் 1943 - மறைவு: 11 மே 2026

யாழ். வட்டுக்கோட்டை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலவாணர் கிருஷ்ணர் அவர்கள் 11-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு அம்பலவாணர் - செல்வரட்ணம் தம்பதியினரின் அன்பு மகனும்,

வரதலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

கோணேசன், கேதீசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதா, கஜனி ஆகியோரின் மாமனாரும்,

சரஸ்வதிதேவி நவநாதன், காலஞ்சென்றவர்களான சண்முகராஜா, சிவசுப்பிரமணியம், தவமணி கந்தசாமி, மனோன்மணி நாகரட்ணம், பூபாலராஜா, விக்கினராஜா ஆகியோரின் அன்பு சகோதரனும்,

சித்தாரா, அஜயன், லக்ஷானியா, தர்ஷன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-05-2026 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம்1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

தொடர்புகளுக்கு:

77 731 9150
76 849 9249

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/05/2026 00:00)