திரு. அம்பலவாணர் சண்முகம்
தோற்றம்: 25 அக்டோபர் 1928 - மறைவு: 17 ஜூன் 2021
யாழ். நீர்வேலி கரந்தனைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் சண்முகம் அவர்கள் 17-06-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
கனகம்மா (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
யோகராணி (கனடா), சோதிமலர், சாரதாதேவி (ஜேர்மனி), ஜானகி, கலைவாணி (கனடா), காலஞ்சென்ற ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், இராசையா, நடராசா, அன்னம்மா, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், செல்லையா, தங்கம்மா மற்றும் பொன்னம்பலம், காலஞ்சென்ற இராசதுரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பாலேந்திரா, ஞானசேகரம், சிவநேசராசா, தருமலிங்கம், பரசுராமன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோகுலன் - நேருகா, பிரதீபராஜ், இந்துசன், சுபாங்கி, லக்சிகா, பதுமரதன், பதுமஜனனி, பதுமவளவன், நிராஜ், ஷயானி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சபிநேஷ், சபினாஷ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-06-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி பத்தகலட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
