திருமதி. அம்பிகாதேவி பரஞ்சோதி
(வருமான வரி திணைக்கள உத்தியோகத்தர் - அவுஸ்திரேலியா)
தோற்றம்: 02 ஜனவரி 1957 - மறைவு: 07 ஜூலை 2025
யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், சிட்னி - அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அம்பிகாதேவி பரஞ்சோதி அவர்கள் 07-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு வேலுப்பிள்ளை (இளைப்பாறிய பிரதம கணக்காளர்) கமலாதேவி தம்பதியினரின் இரண்டாவது மகளும்,
காலஞ்சென்றவர்களான ஜெயதேவி (ஆசிரியை), ஆனந்தவேல், கலாதேவி (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பரஞ்சோதி அவர்களின் அன்பு மனைவியும்,
ரூபன் (அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற விவேகானந்தராஜா அவர்களின் மைத்துனியும்,
ஆதித்யா, விசாகன் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-07-2025 வியாழக்கிழமை சிட்னியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
