Mrs Ambikapathy Sornaganthy
Date of Birth: 17 October 1941 - Deceased: 14 May 2022
யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகாபதி சொர்ணகாந்தி அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மூன்றாவது மகளும்,
காலஞ்சென்ற இராசையா, சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அம்பிகாபதி(முன்னாள் வேலணை தபால் ஊழியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சத்தியவாணி, காலஞ்சென்ற நித்தியவாணி, வாமணன், வாமினி ஆகியோரின் அருமைத் தாயாரும்,
பாலசிறிதரன், திருவருட்செல்வன், சுகந்தி, உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அம்பிகாநிதி, தர்மலெட்சுமி மற்றும் மல்லிகாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம், அமிர்தலிங்கம், துரைசிங்கம், நடராஜா, நீலாம்பிகை, வல்லிபுரம், சபாரத்தினம், இரத்தினவல்லி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற ஜெகசோதி, கனகரத்தினம், சிவசோதியம்மா, யோகம்மா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
துஷாரா, பிரஷாந், பிருஷா, கிரிஷாந், சானுகன், யதுசிகா, கஜீபன், கஜலக்சன், கெசானி, சிதோஷ், நிருசிகா, லக்சாயினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை அம்பலவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
