திரு. அமிர்தலிங்கம் வாமதேவன்

(முன்னாள் மகாஜனக் கல்லூரி கணித ஆசிரியரும்,இளைப்பாறிய நிலஅளவை உதவி அத்தியட்சகர்)

அமிர்தலிங்கம் வாமதேவன்

தோற்றம்: 02 செப்டம்பர் 1938 - மறைவு: 22 மார்ச் 2023

யாழ் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் , நீர்கொழும்பை வசிப்பிடமாகவும், கொண்டவரும் முன்னாள் மகாஜனக் கல்லூரி கணித ஆசிரியரும், இளைப்பாறிய நிலஅவை உதவி அத்தியட்சருமான மகாஜனன் அமிர்தலிங்கம் வாமதேவன் அவர்கள் தமது 84ஆவது அகவையில் 22-03-2023ம் திகதி புதன்கிழமை அன்று நீர்கொழும்பில்  இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அமிர்தலிங்கம் (ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்), விசாலாட்சி தம்பதிகளின் மூத்த புதல்வனும்,
 
ஆசிரியையும் மகாஜனக் கல்லூரி பழைய மாணவியுமான திருமதி. பாலசுந்தரி வாமதேவன் அவர்களின் அன்புக் கணவரும்,
 
மகாஜனன்களான தமிழினி (ஆக்லாந்து, நீயூசிலாந்து), வலவன் (இந்தியா), விறலோன் (இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகாஜனனன்களான காலஞ்சென்ற சிந்தாமணி, குகமணி, தேவதாசன், காலஞ்சென்றவர்களான சாரதமணி, சோதிமணி மற்றும் ஜெயமணி, ஆனந்தகுமாரன், புராந்தகன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

Dr. ரமேஸ், நிதி, சுஜித்தா ஆகியோரின் மாமனாரும்,
 
தீபிகா, சகானா, மருணி, தன்மயி (தன்மதி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்


அன்னாரின் பிரிவினால் துயரடைந்திருக்கும், குடும்பத்தினருக்கு எமது கல்லூரி சமூகம் சார்பிலும், எமது சங்கத்தின் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபகங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்.

மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்,கனடா

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/03/2023 05:28)