திரு. அம்பலவாணர் ஜெயராம் (சுருதி வேந்தன்)

(ஓய்வுநிலை யாழ். பொதுசன நூலக புத்தக செவ்வை பார்வையாளர், வயலின் வித்துவான்)

அம்பலவாணர் ஜெயராம் (சுருதி வேந்தன்)

தோற்றம்: 29 ஆகஸ்ட் 1959 - மறைவு: 08 ஏப்ரல் 2024

யாழ். நாச்சிமார் கோவிலடி, வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும், கலட்டி அம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலவாணர் ஜெயராமன் அவர்கள் 08-04-2024 திங்கட்கிழமை அன்று அதிகாலை 12.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் (மிருதங்க வித்துவான்) - காமாட்சியம்மா தம்பதியினரின் புத்திரனும், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் - புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கமலேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,

சாரங்கன் (Ceylon Steel Corporation Ltd - Area Sales Officer), சைந்தவி (செலான் வங்கி - சுன்னாகம்), சாருகேசி (ஆசிரியை - கொக்குவில் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மயூரி, மிறோஜன் (ICBT Campus - Jaffna) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆறகனின் அன்புப் பேரனுமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்இன்று 11-04-2024ம் திகதி வியாழக்கிழமை காலை8:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 11:00 மணியளவில்  கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

முகவரி:

இல-07, கலட்டி அம்மன் வீதி,

யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"எம் கனத்த இதய அஞ்சலி. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் அன்னாரின் குடும்பத்தினர்களுக்கு எம் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி"
- Shsnthini Thuraiyarangan (Germany, 12/04/2024 02:29)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/04/2024 00:00)