Mrs. Anandakumarasamy Sarojadevi
(முன்னாள் தேயிலை ஆராய்ச்சி நிலையம், தலவாக்கலை)
Deceased: 09 January 2025
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் மருதடியைப் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆனந்த குமாரசாமி சரோஜாதேவி அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று காரைநகரில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நயினாதீவு ஐயாத்துரை (முன்னாள் அதிபர்) - பார்வதி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற அருளையா (விதானையார்) - நாகரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
கலாநிதி ஆனந்தக்குமாரசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பாஸ்கரன், பானுமதி மற்றும் சிவபாலன், காந்திமதி, பிரேமாவதி, ஸ்ரீதரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிவபாதம் (சிங்கபூர்), நமசிவாயம் (மாஸ்டர்- காரைநகர்) ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-01-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது மருதடி இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
