Mrs. Anandasoruby Sathiyaseelan

Anandasoruby Sathiyaseelan

Date of Birth: 19 April 1969 - Deceased: 25 July 2024

யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கைப்  பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அனந்தசொரூபி சத்தியசீலன் அவர்கள் 25-07-2024 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் சின்னத்துரை-தவமணி தம்பதியினரின் அன்பு புதல்வியும், அம்பலவாணர்-சரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

சத்தியசீலன் (ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்பு மனைவியும்,

பாகேசன், திலோஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சி.பிரணவ சொரூபன் (ஆசிரியர்), சி.பிரமணஸ்பதி (உரிமையாளர்- KT பாம் புன்னலைக்கட்டுவன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-07-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனகிரியைகளுக்காக விலங்கன் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

 இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/07/2024 04:00)