திருமதி. அன்னம்மா துரைச்சாமி
மறைவு: 10 ஜனவரி 2025
யாழ். தாவடியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னம்மா துரைச்சாமி அவர்கள் 10-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா - முத்துபிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - சின்னப்பிள்ளை தம்பதியினரின் ஆசை மருமகளும்,
காலஞ்சென்ற துரைச்சாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, கதிரேசு மற்றும் கனகசபாபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், புவனேஸ்வரன், விக்கினேஸ்வரன், மதிவதனி, இலங்கநாதன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,
கமலாதேவி, சகுந்தலாதேவி, சண்முகநாதன், இந்துமதி ஆகியோரின் ஆசை மாமியாரும்,
உமாசங்கர், உமாசாயினன், கம்ஷானந்தி, நிருஸன், ஜெகஜீவன், சுமதி, கஜந்தி, சர்விகா, காரணிகா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
யனுசிகா, லஸ்மிதா, அபிநயா, ஆதித்தன், ஜெய்ஷனா, ரிஷானி, மயூரிகா, சாதுரியன், தேஜஸ்விகா, சாய்பிருந்தன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
