திரு. அந்தோனிப்பிள்ளை மரியாம்பிள்ளை இராஜேந்திரம்
(இளைப்பாறிய அதிபர், யாழ் வயாவிளான் றோ.க.த.பாடசாலை)
தோற்றம்: 22 ஜனவரி 1934 - மறைவு: 08 ஆகஸ்ட் 2024
யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி மேற்கு சிற்றம்பலபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை மரியாம்பிள்ளை இராஜேந்திரம் அவர்கள்08-08-2024 வியாழக்கிழமை கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை-றோசம்மா தம்பதியினரின் ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான இராசையா-அலக்கொக்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பிலோமினா (ஞானம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
றெஜினோல்ட் (ஜேர்மனி), றுஜியந்தி (கனடா), றொசற்மெலானி (மக்கள் வங்கி முகாமையாளர், பிராந்திய தலைமையகம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகௌரி (கனடா), யூலியன் (கனடா), தவநாயகம் (ஓய்விநிலை அதிபர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றுபீட்சா, றொட்வின், ஜெனியர், ஜெனற், நிவாசனா, நிதுசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 09-08-2024 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியவில் அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்று பூதவுடல் சூசையப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
