திரு. அந்தோனிமுத்து செல்வரட்ணம் (ஜேசுரட்ணம்)
தோற்றம்: 05 டிசம்பர் 1960 - மறைவு: 29 ஜூலை 2024
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வலித்தூண்டலை வசிப்பிடமாகும் கொண்ட திரு. அந்தோனிமுத்து செல்வரட்ணம் அவர்கள் 29-07-2024 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னாரின் புகழுடல் 30-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, வலித்தூண்டல் அன்னாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, அன்னாள் ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
