திருமதி. அந்தோனிப்பிள்ளை கிறிஸ்ரினா (தங்கராணி)

அந்தோனிப்பிள்ளை கிறிஸ்ரினா (தங்கராணி)

தோற்றம்: 25 ஜூன் 1940 - மறைவு: 23 ஜனவரி 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அச்சுக்கூட ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அந்தோனிப்பிள்ளை கிறிஸ்ரினா அவர்கள் 23-01-2025 வியாழக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற அந்தோணிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

புஷ்பராணி, ஜெயராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜெஸ்மன் (ரூபன்), கெனத் (லசி), ஜீலியற் (பாமினி), காலஞ்சென்ற மேரி ஆன் (யாமினி), அலன் நிசாந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சர்மிளா, சுகந்தி, ஜெகதீசன், சுதர்சன் ஜெயகுமார், அமலா ஆகியோரின் மாமியாரும்,

ஜெனிபர், ஜெறின், நிக்கோல், டணி, யஸ்மி, றொகான், றெஜான், யோன் வலன், கஸ்தோன் வியான்னி, பியூரி ஆகியோரின் பேத்தியும்,

டியோனின் பூட்டியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 28-01-2025 செவ்வாய்க்கிழமை மாலை 04.00 மணியளவில் யாழ் மரியன்னை பெயராலையத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, புகழுடல் கொஞ்செஞ்சிமாதா  சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.    

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/01/2025 05:00)