Mrs. Antonysamy Jebamalai Mary
Date of Birth: 24 April 1952 - Deceased: 03 September 2024
உயிர்தெழுதலும் வாழ்வும் நானே,
என்னில் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்
(யோவான் 1125)
நுவரெலியா-பொகந்தலாவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அந்தோனிசாமி ஜெபமாலை மேரி அவர்கள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
கிளேரா, ஜோன்சன், பென்ஜமின், அருட்பணி மத்தியு ஆகியோரின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் பொகந்தலாவை கெர்க்கஸ்வால்ட் கீழ் பிரிவில் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 05-09-2024 வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் பொகந்தலாவ செபமாலை மாதா ஆலயத்தில் இரங்கல் திருப்பலியின் பின் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
