திரு. அப்பையா கனகலிங்கம்
(Retired Postmaster)
தோற்றம்: 23 செப்டம்பர் 1930 - மறைவு: 07 பெப்ரவரி 2021
யாழ்.உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, மானிப்பாய், உரும்பிராய், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அப்பையா கனகலிங்கம் அவர்கள் 07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அப்பையா பொன்னம்மா (சுதுமலை, மலேசியா) தம்பதிகளின் மூத்த அன்பு மகனும்,
காலஞ்சென்ற இராசையா நல்லம்மா (சுதுமலை) தம்பதிகளின் அன்பு வளர்ப்பு மகனும்,
காலஞ்சென்ற தையல்முத்து (மலேசியா) அவர்களின் அன்புப் பெறா மகனும்
,காலஞ்சென்ற மாரிமுத்து, இராசம்மா(உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகுமார் (லண்டன்), சசிகலா, மோகனகுமார், சுந்தரகுமார், சுசிகலா, சுமதி, ஈஸ்வரகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சத்தியா, இராஜமனோகரன், பிறேமரஞ்சினி, சுபோஜனா, முரளீதரன், ஞானசொரூபன் (ராஜா), செல்வவதனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சண்முகநாதன் (லண்டன்) அவர்களின் உடன் பிறவா அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மகாலிங்கம், லீலாவதி (மலேசியா), கமலாவதி (மலேசியா), பத்மாவதி (மலேசியா), காலஞ்சென்ற சுந்தரலிங்கம் (தங்கராஜா), சிவலிங்கம் (பிரித்தானியா), சத்தியா (மலேசியா), குணம் (மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சத்தியநாதன், மகேஸ்வரி (கனடா), காலஞ்சென்ற சோதிமலர், யோகராஜா (லண்டன்), காலஞ்சென்ற சற்குணம், நற்குணம் (லண்டன்), சிவானந்தம் (கனடா), நித்தியானந்தம் (உரும்பிராய்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பைரவி, பிரணவன், செந்தூரன்-லாவண்யா ஜோர்ஜியா, சிவகாமி- தரணிபன், அபிராமி- மக்னஸ், மாறன், தாரணி, சேயோன், ஜெகன், லவன், சரண், சேந்தன், ரொஹான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,கல்யாணி, நலன், வேலன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
www.tamilthakaval.org
