திருமதி. அரசரட்ணம் விமலேஸ்வரி
தோற்றம்: 30 ஜனவரி 1948 - மறைவு: 11 ஜூன் 2026
யாழ். சாவகச்சேரி டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - மருதானையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அரசரட்ணம் விமலேஸ்வரி அவர்கள் 11-06-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா - தையல் நாயகி (அழகம்மா) தம்பதியினரின் பாசமிகு மூத்தமகளும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம்-ரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
அரசரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானேஸ்வரி (கனடா), யோகேஸ்வரி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
சிவலிங்கம், விக்னேஷ்வரன், மல்லிகாதேவி ஆகியோரின் மைத்துனியும்,
வள்ளுவன் (கனடா), Dr. இளங்கோவன், பாரதி, சீதா (கனடா), புகழேந்தி (தென் ஆபிரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஆரணி, நிறோசினி. றொசானி, தேவமனோகரன், ஷாம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யுதிஸ்டன், ஆர்த்தி, லெமுவல், கெனா, அத்வித்தியா, தீரன், ராகுல், கீர்த்தன், சபீஷன் றஜீஷன் விபூஷன், டிலக்ஷன், டில்ஷி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 - மாலை 6.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 15-06-2026 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 02.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
