திரு. அருளையா சுப்பிரமணியம்
மறைவு: 24 ஆகஸ்ட் 2023
யாழ் நீர்வேலியைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட அருளையா சுப்பிரமணியம் அவர்கள் நேற்று 24-08-2023ம் திகதி வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அருளையா தையலம்மா தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் நெய்வானை தம்பதியரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அரியமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
குகதாசன் (சுவிஸ்), காலஞ்சென்ற உதயதாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தயாநிதி (சுவிஸ்), கௌசலா (கௌசி- ஆசிரியை- யாழ் ஸ்ரீ புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரி-புத்தூர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வசீகரன் (யா சென்ஜோன்ஸ் கல்லூரி), ஜான்சன் (சுவிஸ்), உதிசன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற ஞானம்மா மற்றும் தவராசலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-08-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக சீயாக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் :- குடும்பத்தினர்
நீர்வேலி மேற்கு
நீர்வேலி, யாழ்ப்பாணம்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/08/2023 01:29)
