Mrs. Ariyakumar Rohinidevi
Deceased: 21 May 2025
யாழ். காரைநகர் வெடியரசன் வீதியைப் பிறப்பிடமாகவும், தனங்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அரியகுமார் ரோகினிதேவி அவர்கள் 21-05-2025 புதன்கிழமை அதிகாலை இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி - இலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை - தவமணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
அரியகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
சாருமதி, சுரேஸ்குமார், தயானந்தன் (கண்ணன்), நந்தகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
றஐித், கலைச்செல்வி, பகீரதி, அனுசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதிவதனன், நதிசீலன் (சந்திரன்), கிஸ்ணவேணி (தேவி), நீலவேணி, கிருஸ்ணராணி (தங்கச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
