Mr. Ariyarathnam Sivagurunathan

Ariyarathnam Sivagurunathan

Date of Birth: 06 October 1943 - Deceased: 09 June 2025

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அரியரத்தினம் சிவகுருநாதன் அவர்கள் 09-06-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், அரியரத்தினம் - குட்டிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், துரைச்சாமி - நல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிறீகாந்தன் (ஜேர்மனி), சிறீதரன் (இலண்டன்), சிறீக்குமார் (அவுஸ்திரேலியா), சிறீரங்கன் (ஆசிரியர் - கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி), பிறேமதிலி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

உதயகுமாரி (ஜேர்மனி), டில்ருக்ஷா (இலண்டன்), சுரேஸா (அவுஸ்திரேலியா), சியாமளா (ஆசிரியை - மாநகரசபை முன்பள்ளி, நல்லூர்), சதீஸ (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸ்ரீபைரவி, ஆதீபன் (ஜேர்மனி), கிருத்திகா, சானுகா (இலண்டன்), யுவன், தனுஜன், இனியன் (அவுஸ்திரேலியா), தேனுஜன், சகானா, நேருஜன் (உரும்பிராய்), தேனிகா, கேதனா, யாதனா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

தனபாலசிங்கம், காலஞ்சென்றவர்களான பூமணி (ரத்தினம்மா), பாலசிங்கம், செல்வரத்தினம், கனகரத்தினம், திருநாவுக்கரசு. ஆகியோரின் சகோதரரும்,

மனோன்மணி, யோகமணி, புவனேஸ்வரி, கந்தசாமி, தங்கவேலு ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-96-2025 புதன்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது கற்புலம் வீதி இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் இளங்கோடு இந்து மயானத்தில்  தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/06/2025 04:00)