Mrs. Arulambalam Malarsothi
Date of Birth: 14 March 1940 - Deceased: 04 April 2025
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு அங்காளப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருளம்பலம் மலர்சோதி அவர்கள் 04-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துதம்பி - சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருளம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
அருள்சோதியின் அன்புத் யாயாரும்,
மதிவாணியின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், இராஜதுரை மற்றும் ஜெகசோதி, தங்கராசா, ரவீந்திரராசா, பவளம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், பஞ்சநாதன், அன்னப்பிள்ளை, சிதம்பரேஸ்வரி மற்றும் சின்னத்தங்கச்சி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம் - சரோஜினிதேவி தம்பதியினரின் சம்பந்தியும்
அபிசனா, துஷானா. ரவிஸ்ணா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
