திரு. அருளம்பலம் சண்முகநாதன்
தோற்றம்: 17 மே 1970 - மறைவு: 22 ஏப்ரல் 2023
யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனி Freiburg/Elbe ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்பலம் சண்முகநாதன் அவர்கள் 22-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பா (சுதா- ஜேர்மனி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
டினேஸ்குமார் (ஜேர்மனி), கஜனன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, சாரதாதேவி, செல்வரத்தினம், லோகநாதன், குகபாலன், சிவபாலன், சிவகுமார் மற்றும் நவரத்தினம் (இலங்கை), நவமலர் (டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேஸ்வரி (கனடா), தங்கராசா (இலங்கை), காலஞ்சென்ற இராமேஸ்வரன் (லண்டன்), இராசமலர் (சுவிஸ்), பிறேமலதா (ஜேர்மனி), பத்மினி, காலஞ்சென்ற சச்சிதானந்தம், ஜெகதாம்பாள், நாகராணி, சிவநேசன் (டென்மார்க்) ஆகியோரின் மைத்துனரும்,
கனகசபாபதி (கனடா), ரேணுகா (இலங்கை), பத்மராணி (லண்டன்), ரவீந்திரன் (சுவிஸ்), தெய்வேந்திரன் (ஜேர்மனி) ஆகியோரின் சகலனும்,
கலா, கேதினி, டெய்வராஜ், டிலானி, சபிநாத், சகாநாத், விக்நாத், கிருபாகரன் (லண்டன்), நிசாந்தி, சர்மிளா, பாமினி, நிசாந்தன், சாளினி, தாரணி(சுவிஸ்), கணேசதாசன், தர்மினி, ஜெயந்தி, புஸ்பகுமார் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
பிரசன்னா, அர்ச்சனா, தினேஸ், அனோஜன், நிதர்சனா, இளங்கோ, காலஞ்சென்ற பிரதீபன், நிமாலினி, சிறீகரன், லக்சன், சிந்தியா ஆகியோரின் ஆசை மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி:
www.tamilthakaval.org
