திருமதி அருளப்பு மலர்மணி
தோற்றம்: 08 டிசம்பர் 1942 - மறைவு: 25 ஏப்ரல் 2022
யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருளப்பு மலர்மணி அவர்கள் 25-04-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ரத்தினம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சிமியோன் கிறிஸ்ரினா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அருளப்பு(முன்னாள் கட்டிட ஒப்பந்தகாரர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெனோவா(இலங்கை), அழகுராசா(சிறில்- டென்மார்க்), வனிதா(இலங்கை), றொபின்குட்(பிரான்ஸ்), டெலன்ஸ்(ஜேர்மனி), யசி(இலங்கை), ஜெஸ்மன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அந்தோனிப்பிள்ளை(இலங்கை), கிளிவவா(டென்மார்க்), உதயசிங்கம்(இலங்கை), சயிலா(பிரான்ஸ்), சண்சியா(ஜேர்மனி), நிக்சன்(இலங்கை), கினித்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கமலமணி, தங்கராசா, அசோக்குமார், காலஞ்சென்ற துரைமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஞானம்மா, செல்லக்கிளி ராணி, சூசைப்பிள்ளை, காலஞ்சென்ற சிங்கராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரியதர்சினி(இலங்கை), அஸ்மன்(இலங்கை), சொமாண்டோ(இலங்கை), துசி(டென்மார்க்), டினிஷா(டென்மார்க்), டயானி(ஜேர்மனி), சுதர்சன்(பிரான்ஸ்), சுதர்சினி(இலங்கை), யான்சன்(இலங்கை), றொகான்(பிரான்ஸ்), டிலைக்சனா (பிரான்ஸ்), அபிடன்(பிரான்ஸ்), டெனோஜினி(ஜேர்மனி), டெனிசியா(ஜேர்மனி), டியா(ஜேர்மனி), ஸ்ரெபான்(பிரான்ஸ்), சயிந்தா(இலங்கை), அபிசை(பிரான்ஸ்), ஆரோன்(பிரான்ஸ்), ஐஸ்வர்யா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டார்வின், லகின்(இலங்கை), சியான்சிகா, ஜெஸ்வின்(இலங்கை), நிவிதா, டெப்னா, டெப்னி(இலங்கை), சரணியா, கீர்த்தனா(டென்மார்க்), பிரவிணா, பிரித்திகா, திஷாந்(டென்மார்க்), ஜெய்ஸ், ஷியானா, ஜெயானா(ஜேர்மனி), ஜெனிலியா, கவின்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-04-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கொழும்புத்துறையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு அதனைத்தொடர்ந்து கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித மரியாள் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
