திருமதி. அருள்மொழி கதிர்காம தர்ஷன்
(முன்னாள் ஆசிரியர் - கொழும்பு சைவமங்கையர் வித்தியாலயம், யாழ் / வேம்படி மகளிர் உயர்தரக் கல்லூரி, முஸ்லிம் மகளிர் கல்லூரி கொழும்பு)
தோற்றம்: 09 நவம்பர் 1969 - மறைவு: 11 ஜனவரி 2023
யாழ். கோண்டாவில் கிழக்கு இலக்கம் 188, பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அருள்மொழி கதிர்காம தர்ஷன் அவர்கள் 11-01-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுந்தரம் தர்மலிங்கம் புஸ்பராணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,
கெருடாவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, சிவஞானம் தம்பதிகளின் மூத்த மருமகளும்,
கதிர்காம தர்ஷன் அவர்களின் அன்பு மனைவியும்,
விகாஷினி, திருக்குமரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தேன்மொழி, கனிமொழி, தர்மினி, ரேவதி, வாணி ஆகியோரின் அன்பிற்குரிய சகோதரியும்,
கிரிஷாந்தன், தேவசுதன், இளங்கீரன், தர்மராஜ், தவபாலன் ஆகியோரின் மைத்துனியும்,
கதிர்காம சுதர்ஷன், மீரா ஆகியோரின் அண்ணியும்,
சுபன், தேசிகன், கவிந்தலா, அபிவதன், ஆருஷன், ஆதிஷன், அகரா, ஆதிரன், மதுஷனா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
