திரு. ஆறுமுகம் சொர்ணகுலசிங்கம்
(காங்கேசன்துறை சீமேந்துத் தொழிற்சாலை முன்னாள் ஊழியர்)
தோற்றம்: 25 ஜனவரி 1955 - மறைவு: 25 பெப்ரவரி 2025
யாழ். கரம்பைக்கடவை வயாவிளானைச் சேர்ந்த இவர் ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை வதிவிடமாகவும், தற்போது உரும்பிராயை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் சொர்ணகுலசிங்கம் அவர்கள் 26-02-2025 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
காலஞ்சென்ற ஆறுமுகம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
அன்னார், குணமணி அவர்களின் அன்புக்கணவரும்,
மோகன் (பிரான்ஸ்), மோகனா, கல்பனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வே. வினோத், குருபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரராஜசிங்கம்(ஜேர்மனி), காலஞ்சென்ற குணபாலசிங்கம், சிவயோகேஸ்வரி(ஆவரங்கால்), கேதாரசிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 02-03-2025ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பலாலி வீதி உரும்பிராய் சந்தியில் அமைந்துள்ள அவரது வீட்டில் காலை 9:00 மணிக்கு கிரியைகள் ஆரம்பித்து காலை 11:00 மணியளவில் வயாவிளான் இந்து மயானதில் தகனம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
