திருமதி. ஆறுமுகம் தவமணி
மறைவு: 02 நவம்பர் 2024
யாழ். ஆவரங்கால் மேற்கு இந்து இளைஞர் வீதியை பிறப்பிடமாகவும், சிவன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆறுமுகம் தவமணி அவர்கள் 02-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மூத்தான்-சிதம்பரம் தம்பதியினரின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
வைரமுத்து, நற்குணம், காலஞ்சென்ற கமலமலர், இராஜதுரை (ஜேர்மனி), காலஞ்சென்ற அன்னராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுபாசினி, பூவாயினி, பிரபாயினி, தீபாயினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவீந்திரன், செல்வகுமார், காலஞ்சென்ற செந்தில் ராஜ், சுந்தரமூரத்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
