திரு. ஆறுமுகம் துரையப்பா
(ஓய்வு பெற்ற தபால் அதிபர்)
தோற்றம்: 04 நவம்பர் 1937 - மறைவு: 08 ஜனவரி 2025
யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கொழும்பு-வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் துரையப்பா அவர்கள் 08-01-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் - இலட்சுமிபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தம்பையா - சிவக்கொழுந்து தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
விசாலாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவதர்சினி (ஆசிரியை), மயூரன் (உதவி முகாமையாளர்-மில்கோ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலகிருஷ்ணன் (ஆசிரியர்), சயிலாயினி ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், தம்பிராசா, தம்பையா ஆகியோரின் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சங்கரப்பிள்ளை, லட்சுமணன், சுந்தரலிங்கம், சிவசுப்பிரமணியம், சரோஜினிதேவி மற்றும் அருளம்பலம், தேவராசா, மகேஸ்வரி, தங்கபுஸ்பம், ஜெயகுமார், சந்திரகுமார் ஆகியோரின் மைத்துனரும்,
மகிந்தன், அபிதன், சங்கவி, சயந்தவி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று காலை 8:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:-
இல-11, வெவசற் பிளேஸ்
வெள்ளவத்தை, கொழும்பு-06.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
