திரு. ஆறுமுகம் உலகநாதன் (சந்திரன்)

ஆறுமுகம் உலகநாதன் (சந்திரன்)

தோற்றம்: 18 மார்ச் 1959 - மறைவு: 02 ஆகஸ்ட் 2025

யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கருவேலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் உலகநாதன் அவர்கள் 02-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் - செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தியாகராஜா - நீலாம்பிகை தம்பதியினரின் மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சிந்துஜா, காலஞ்சென்ற பவித்திரன், கஜன்துகன், கஜன்துகா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

அகிலன், லோகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

வியானின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி, பொன்னம்மா, பாக்கியம் (புஷ்பம்), நவசிவாயம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

நவமணிதேவி, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், சற்குணராசா, சத்தியாதேவி (சந்திரா), சித்ரா, அம்பிகாவதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-08-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, உடலம் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/08/2025 04:00)