திரு. ஆறுமுகநாதன் மகாதேவன்

(ஓய்வு பெற்ற அதிகாரி - இலங்கை இறைவரி திணைக்களம்)

ஆறுமுகநாதன் மகாதேவன்

தோற்றம்: 29 ஏப்ரல் 1942 - மறைவு: 18 மே 2026

யாழ். காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - மொரட்டுவ, கனடா - ஸ்காபுரோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ஆறுமுகநாதன் மகாதேவன் அவர்கள் 18-05-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடுத்தெருவை சேர்ந்த ஆறுமுகநாதன் (S.A.நாதன்) - அன்னம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான கரம்பொனை சேர்ந்த கனகரத்தினம் - சிவகலை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சிவானந்தவல்லி அவர்களின் பாசமிகு கணவரும்,

வாணி, ஜானகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரதீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் (சிரேஷ்ட செயலாளர்- இலங்கை வர்த்தக அமைச்சகம், சட்டத்தரணி), A.நடராசா (முன்னாள் அதிபர் - காரை இந்துக்கல்லூரி, யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி), கனகாம்பிகை, ஞானாம்பிகை, அகிலாம்பிகை, குமாரசாமி (Agriculture Department, Peradeniya) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

இரத்தினேஸ்வரி, சிவசோதி, சத்திதானந்தன் (அவுஸ்திரேலியா), பரிமளசோதி, சதானந்தன் (நியூசிலாந்து), சிநேசம், ரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கஸ்தூரி, அஸ்வின், அனுசிவன், அஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-05-2026 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரை Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மறுநாள் 21-05-2026 வியாழக்கிழமை மதியம் 1:00 - 3.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடை பெற்று, Highland Hills Funerals Home and Cemetery ( 12492 Woodbine Ave) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ஜானகி:- +1 416 830 2700
பிரதீபன்:- +1 416 230 1810

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/05/2026 00:00)