திரு. அருணாசலம் பொன்னம்பலம்
(இளைப்பாறிய நிர்வாகப் பொறியியலாளர் PWD இலங்கை, இளைப்பாறிய தாதியர்- லிகிதர், Fudger House, Long-Term Care Home, City of Toronto)
மறைவு: 17 மே 2022
யாழ். வரணி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் பொன்னம்பலம் அவர்கள் 17-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பண்டிதர் பொன். வேலுப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான தெய்வநாயகி, மகேஸ்வரி மற்றும் சரஸ்வதிதேவி(இலங்கை), இந்திராதேவி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவரஞ்சிதம் (கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பவானி (இலங்கை ), ரவீந்திரன் (ஓட்டாவா- கனடா), காலஞ்சென்ற கௌரிபாலன், மற்றும் றோகினி (Toronto- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சபாநாதன் (இலங்கை), சந்திரா (ஓட்டாவா- கனடா) மற்றும் சதீஷ் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சியாமளன், யதுகுலன், கௌரிபாலன், கௌதமன், பிரணவன் மற்றும் நாவலன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
