Mr. Arunasalam Pulenthiran
(Retired Anti Malaria Operator)
Date of Birth: 26 August 1941 - Deceased: 15 April 2025
யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் புலேந்திரன் அவர்கள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா - முத்துப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, அருட்பிரகாசம், தெய்வேந்திரம் மற்றும் சிவபாக்கியம், தில்லைநாயகர், படவீரசிங்கம், கத்தசாமி, டிமிலாதேவி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கமலேந்திரன், அருந்தினி (இலண்டன்), ரவீந்திரன் (இலண்டன்), அரவிந்தன் (வசந்தன்-நீர்வள சபை, யாழ்ப்பாணம்), ஜீவநந்தினி (இலண்டன்), குணசீலன், டனீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜீவபாலன் (இலண்டன்), லக்சனா (இலண்டன்), பிறேமா, சிவச்செல்வன் (இலண்டன்), கம்சனா (மாவட்ட செயலகம், கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரகிர்த்தன், கிரிஷா, ரித்விகா, லவுணிகா, அபிலாஷ், கபிசன், தக்சன், தர்வின், கர்சின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-04-2025 வியாழக்கிழமை காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் குச்சுப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
