திரு. அருணாசலம் இராஜேந்திரன்
தோற்றம்: 23 அக்டோபர் 1959 - மறைவு: 16 அக்டோபர் 2025
யாழ். கரம்பன் தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பேர்லின் - ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் இராஜேந்திரன் அவர்கள் 16-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் - சத்தியபாமய தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற இராசையா - புஸ்பராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனகன், ஜனனி, ஜானு ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
தனலட்சுமி (இராணி-கனடா), இரவீந்திரன் (ரவி-ஜேர்மனி), இளங்குமரன் (இளங்கோ-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனபாலசிங்கம் (பாலன்), சிவகுமாரி, காலஞ்சென்ற அகிலதிருநாயகி (சாந்தா), ரஜனி, காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரன், உமாகாந்தன் மற்றும் ஜெயகாந்தன், பிரன்ஸ்வாஸ், சிறிகாந்தன், இராசகாந்தன், புஸ்பலதா, அருணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரகு, சுதா, திவான் ஆகியோரின் அன்பு மாமாவும்,
சிந்துஜா, சௌமியா, ராவண்யா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
இந்துஜா, விதுஷா, தர்சாய்ந் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
