திரு. அருணாசலம் சண்முகசாமி

(முன்னாள் இலங்கை மத்திய வங்கி சிரேஷ்ட கணக்காளர்)

அருணாசலம் சண்முகசாமி

தோற்றம்: 08 ஜூலை 1939 - மறைவு: 07 ஜூலை 2024

யாழ். மட்டுவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் சண்முகசாமி அவர்கள் 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம்-தில்லையம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான  கனகசபாபதி-சிவயோகம் தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
விஜயேந்திரராணி அவர்களின் அன்புக் கணவரும்,
 
ஆரூரன், குமரன், கோகிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
வாசுகி, ஷிராணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
காலஞ்சென்ற யோகநாதன் (கிச்சி) அவர்களின் அன்புச் சகோதரும்,
 
கேந்திரன், யோகேந்திரன், இந்திராணி, பாலேந்திரா ஆகியோரின் அன்பு மைத்தனரும்,
 
யதுஷன், ஹரிணி, நிருத்தன், நந்தனா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
 
அன்னாரின் புகழுடல் 11-07-2024 வியாழக்கிழமை அன்று காலை 9:00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, கல்கிசை பொது மயானத்தில் பிற்பகல் 2:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
 தகவல்:-  குடும்பத்தினர்
 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/07/2024 19:22)