திரு. அருணாசலம் சிவநாதன்
(உரிமையாளர் - ஸ்ரீ ஸ்கந்த பவனம் அரிசி ஆலை, அகில இலங்கை சமாதான நீதவான்)
தோற்றம்: 15 அக்டோபர் 1942 - மறைவு: 21 ஏப்ரல் 2023
வவுனியா சின்னப்புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், சின்னப்புதுக்குளம், யாழ். நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் சிவநாதன் அவர்கள் 21-04-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் சின்னம்மா தம்பதிகளின் ஏகபுத்திரரும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அருண்மொழி (HNB - வவுனியா), அரவிந்தன் (Manager, HSBC - யாழ்ப்பாணம்), அம்பிகை (கனடா), ஆரூரான் (Business Analyst - வன்கூவர்), ஆர்த்திகா (Management Assistant - ATI, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உதயகுமார் (அதிபர், கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயம்), கலாநிதி சுகன்யா (சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம்), சிவநேசன் (Canada), துவாரகா (Social Security Councilor - வன்கூவர்), வேதகிரீஸ்வரன் (ATI, யாழ்ப்பாணம்) ஆகியோரின் மாமனாரும்,
கங்கேஷ்வர் (IIT - கொழும்பு), புருஷோத்தமன் (வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்), கிருஷிகா (வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்), ஆதித்யா சஹானா (சுண்டிக்குளி மகளிர் கல்லூரி), அபராஜிதன் (யாழ் இந்துக் கல்லூரி), ஹம்சத்வனி, யர்ஷன், ஹம்சிகா, யர்ஷிகா (கனடா), அதீனா, ஆதீஷ் (வன்கூவர்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணிமுதல் இல.64, நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு 24-04-2023 திங்கட்கிழமை பி.ப 04:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
