திரு. அருணாசலம்பிள்ளை தேவலிங்கம்
(லிங்கம் ஸ்டோர்ஸ் - இராகலை)
தோற்றம்: 25 அக்டோபர் 1963 - மறைவு: 10 மார்ச் 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் துறையூர் அஞ்சனம் பூலஞ்சேரியை பூர்வீகமாகவும், நுவரெலியா - இராகலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம்பிள்ளை தேவலிங்கம் அவர்கள் 10-03-2025 திங்கட்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையாப்பிள்ளை - அங்காயி அம்மாள் தம்பதியினரின் பேரனும்,
காலஞ்சென்ற அருணாசலம்பிள்ளை - சீதாலெட்சுமி தம்பதியினரின் மகனும்,
தேவகி (பேபி - கொழும்பு), திலகவதி (திலகா - இராகலை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சீவரட்ணம் (கொழும்பு), தியாகராஜன் (இராகலை) ஆகியோரின் மைத்துனரும்,
சிறிதரன் (கொழும்பு), சரன்ராஜ் (கொழும்பு), சஹானா (கண்டி), கஜேந்திரகுமார் ஆகியோரின் மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இராகலை சூரியகாந்தி வீதி, லிங்கம் ஸ்டோர்ஸ் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-03-2025 புதன்கிழமை காலை 8:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:30 மணியளவில் நுவரெலியா பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
