யாழ். மானிப்பாய் வீதி, தாவடி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருந்தவமலர் சுப்பிரமணியம் அவர்கள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா - பொன்னம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சுப்பிரமணியம் (வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
அற்புதமலர் அவர்களின் அன்புச் சகோதரியும்,
கணேஸ்வரனின் மைத்துனியும்,
ஜெயமோகன் (கணக்காளர் - அற்புதா ரேடிங் கொம்பனி), ராஜ்மோகன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர் - கட்டடங்கள் திணைக்களம், யாழ்ப்பாணம்), சிவமோகன் (கனடா), கலைச்செல்வி, பாலமோகன் (கனடா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
ரமா, துளசி (ஆசிரியை - உடுவில் மகளிர் கல்லூரி), கமலதாரணி (கனடா), தமிழ்மாறன் (கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், சண்டிலிப்பாய்), விஜிதா (கனடா) ஆகியோரின் மாமியாரும்,
றோஜிகன், கவின்ராஜ், சர்வயன், சாமியா, சர்மிகா, காலஞ்சென்ற சாமந்தி, திருத்தணிகன், நிலாழினி, பவின், பவினிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-12-2025 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
48-பிள்ளையார் கோவிலடி,
சுதுமலை மானிப்பாய் வீதி,
தாவடி வடக்கு, கொக்குவில்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org

