திருமதி. பகவற்சிங் குணமணி
தோற்றம்: 14 டிசம்பர் 1942 - மறைவு: 07 ஏப்ரல் 2026
யாழ். காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், வவுனியா - நெளுக்குளம் மரக்காரம்பளை வீதியை (குழுமாட்டு சந்தி) வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பகவற்சிங் குணமணி அவர்கள் 07-04-2026 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா - சுந்தரம்மா தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற பகவற்சிங் அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மாவதி, யோகேஸ்வரி, கமலாதேவி, நாகேஸ்வரி, நாகரட்ணம், காலஞ்சென்ற தவராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சரஸ்வதி மற்றும் இராமச்சந்திரன், இராஜேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற அருளானந்தம், கெங்காதரதிலகர், இலக்குமணராஜசிங்கம், சற்குணராசா, நகுலேஸ்வரி, ராதிகா ஆகியோரின் மாமியும்,
தர்சினி, மயூரன், குணசீலன், யசோதா, கம்சிகா, காலஞ்சென்றவர்களான திருவருட்செல்வன், தவறஞ்சினி மற்றும் கல்யாணி, தாரணி, கஜன், நிரஞ்சன், டிலக்சனா, சனோஜன், ஐங்கரன் லக்சிகன், ஆதிரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நிதுஷன், கிரிஷ்ணிகா, சஞ்சய், தேஷ்வின், கருணிகா, பவித்ரன், பிரவின், சைனாஸ், சகானா, அபிலாஷ், கிஷாலினி, அரிஷ், அரிணி, அகிலா, ஆதினி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரிகைகள் 10-04-2026 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் நெளுக்குளம் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
