திருமதி. பாலகிருஷ்ணன் ஜெயந்தினி

பாலகிருஷ்ணன் ஜெயந்தினி

தோற்றம்: 30 செப்டம்பர் 1950 - மறைவு: 06 ஆகஸ்ட் 2025

கொழும்பு கொச்சிக்கடையைப் பிறப்பிடமாகவும், மோதரையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலகிருஷ்ணன் ஜெயந்தினி அவர்கள் 06-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,

கேதீஸ்வரன், உமாகாந்தன் (தினக்குரல்), ஜெயக்குமார், சசிக்குமார், செந்தில்மலர் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

ஜெகதீஸ்வரமலர், யோகேஸ்வரி, சசிகலா, சுதா, நிரஞ்சன்குமார் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-08-2025 வியாழக்கிழமை காலை 8:30 - 3:30 மணி வரை புஞ்சிபொரளை உதேனி மலர்ச்சாலை (888/10, மருதானை வீதி, புஞ்சிபொரளை) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,  இறுதிக்கிரியைகளின் பின்னர் மாலை 4:00 மணியளவில் உடலம் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/08/2025 04:00)