திரு. பாலகிருஷ்ணன் சசிகுமார்
தோற்றம்: 16 ஆகஸ்ட் 1983 - மறைவு: 18 ஜனவரி 2025
காலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, குப்பிளான் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலகிருஷ்ணன் சசிகுமார் அவர்கள் 18-01-2025 சனிக்கிழமை அன்று குப்பிளானில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பாலகிருஷ்ணன் - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அம்பிகைபாகன் (குப்பிளான்) - அருந்ததி (கனடா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பகினா அவர்களின் பாசமிகு கணவரும்,
செரோன், வன்ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வசந்தகுமார், பிரமிளா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
அருள்ரூபன், ஜெயரூபன் காலஞ்சென்ற பிரபலாதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
