திருமதி. பாலசுப்பிரமணியம் கனகம்மா

பாலசுப்பிரமணியம் கனகம்மா

மறைவு: 29 ஜூலை 2025

யாழ். காரைநகர் களபூமி சத்திரந்தையைப் பிறப்பிடமாகவும், வவுனியா வெளிக்குளம் பிள்ளையார் கோயில் வீதியை வசிப்பிட மாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் கனகம்மா அவர்கள் 29-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை - விசாலாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஞானபண்டிதன் (கனடா), ஞானமலர் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுந்தரேஸ்வரன் (இலண்டன்), கருணாதேவி (கனடா) ஆகியோரின் மாமியாரும்,

சரண்கவின், அருணன், விசாகன், லக்சன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:30 மணியளவில் பிள்ளையார் கோவில் வீதி, வெளிக்குளம் முகவரியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, காலை 9:00 மணியளவில் உடலம் வெளிக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/07/2025 04:00)