திருமதி. பாலசுப்பிரமணியம் லட்சுமி
தோற்றம்: 03 செப்டம்பர் 1945 - மறைவு: 13 ஜனவரி 2026
யாழ். தம்பயப்புலம், தெல்லிப்பழை கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் லட்சுமி அவர்கள் 13-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று தனது 80வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகர் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து - நாகம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், கதிரவேலு மற்றும் மகேஸ்வரி, சரோஜினிதேவி, புஷ்பராணி, சின்னராஜா, தவபால் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
பாலேந்திரன் (கிராம சேவகர்), அமிர்தவாஹினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயராணி, இராஜேஸ்வரி, நாகரஞ்சினி, ரகுநாதன், காலஞ்சென்ற சரோஜா ஆகியோரின் மைத்துனியும்,
சுகந்தாதேவி, ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ததுவர்த்தனி, தனுபகன், தருநிகன், வைஷ்ணவி, ராகவி, தரங்கவி, நிக்கொலன்ஸ் ஆகியோரின் பாட்டியாரும்,
இதழிகாவின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-01-2026 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கட்டுப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
