திருமதி. பாலசுப்பிரமணியம் சிவகாமி அம்மையார்

பாலசுப்பிரமணியம் சிவகாமி அம்மையார்

தோற்றம்: 02 ஆகஸ்ட் 1948 - மறைவு: 18 ஜனவரி 2025

யாழ். ஏழாலை தெற்கு விழிகிட்டியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் சிவகாமி அம்மையார் அவர்கள் 18-01-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவபாலன் (முன்னாள் ஆசிரியர் - இரத்மலானை இந்துக்கல்லூரி), துவாரகன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - யாழ் போதனா வைத்தியசாலை), வாமினி (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - காரைநகர் பிரதேசசபை), டபரூபன் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - வலிதெற்கு பிரதேசசபை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்பரசி (பிரதம பொறியியலாளர் - தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்புச் சபை கொழும்பு), சிவச்செல்வன் (ஆசிரியர் - யாழ்.விக்டோரியாக் கல்லூரி), சத்தியவதனா (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்- நல்லூர் பிரதேச சபை) ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரலிங்கம், சந்திரலிங்கம் மற்றும் ஞானாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, கந்தையா, தெய்வானை. வள்ளியம்மை, மற்றும் இலட்சுமி ஆகியோரின் மைத்துனியும்,

யர்சிகன், சிவாதிகா, கேசிகன், காருண்யா, தாரகா, கீர்த்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/01/2025 05:00)