Mr. Balasubramaniam (Rasu) Udaiyar
Date of Birth: 26 October 1951 - Deceased: 14 December 2024
பதுளை-ஹப்புத்தளை கோணமுட்டாவ தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-13 விவேகானந்த மேட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள் 14-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கருப்பண்ணன் உடையார்-ஆனந்தாய் தம்பதியினரின் அன்பு மகனும்,
ஜெயமணி அவர்களின் அன்புக் கணவரும்,
அசோக் (விக்டோரி ரவல்ஸ் - உரிமையாளர்), அரேஸ், நிஷாந்தா (அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருஷ்ணமூர்த்தி (மூர்த்தி ரவல்ஸ்), செல்லம்மாள், தீராயி அம்மாள், பாக்கியம், சரசு, தங்கேஸ்வரி (தீராயி), கனகாம்பாள், பரமேஸ்வரி, ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
தீபா, ட்ரொவீனா, அருளேந்திரன் (அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தரணி, தனுஷ்வினி, ஶ்ரீசரண், சாய்சரண், ஆதனா, ஜெய்வின் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் இல-23/2, விவேகானந்த மேடு, ஜிந்துப்பிட்டி (காளியப்பா தொடர்மாடி) இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16-12-204 திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் புகழுடல் மாதம்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
