திரு. பெஞ்சமின் ஜெபரத்தினம் நவரட்ணம்
(Electrical Contractor)
தோற்றம்: 21 மே 1943 - மறைவு: 16 செப்டம்பர் 2024
நுவரெலியாி-ஹட்டனைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பெஞ்சமின் ஜெபரத்தினம் நவரட்ணம் அவர்கள் 16-09-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான எட்வின் நவரட்ணம்-அன்னலக்சுமி தம்பதியினரின் மகனும்,
காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி-பொன்னம்மா தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நிலான், நிலானி, சுஜந்தன், சுகந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுமதி, குமரேசன், கிருசாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், யோகரட்ணம், பிராங் மற்றும் ஜோய் அரியதேவா, தர்மரட்ணம், இமானுவேல் (கிருபா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
நிருத்தி, பிரனீஸ், டிபேஸ், மாதுஸ், திவானி, கேதார் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-09-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் மட்டுவில் தெற்கில் உள்ள "நிலாமனை" இல்லத்தில் நடைபெற்று, குச்சுப்பிட்டி மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
391A, மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
