Mr. Benjamin Jeyachandran Jeyam
Date of Birth: 08 March 1958 - Deceased: 17 June 2025
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், இல - 372, அளுத் மாவத்தை, கொழும்பு 15 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பெஞ்சமின் ஜெயசந்திரன் ஜெயம் அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா ஜெயம் - சந்திரமதி ஜெயம் தம்பதியினரின் அன்பு மகனும்,
ஷாமளா அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஸ்டின் பிரதிஷனாவின் பாசமிக்க தந்தையும்,
ருத் ரேணுகாவின் சகோதரரும்,
லோகநாதனின் மைத்துனரும்,
ஜெசிக்கா, ஜேம்ஸ் ஆகியோரின் ஆசை மாமாவும்,
மகேந்திரன், கனகேஸ்வரி, சந்திரிக்கா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-06-2025 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணி முதல் பொரளை A.F.Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 21-06-2025 சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இறுதி ஆராதனைகள் நடைபெற்று, மாலை 4:30 மணியளவில் சரீரம் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
