கலாநிதி பெஞ்ஜமின் S ஜெயரட்ணம்
மறைவு: 28 ஜனவரி 2019
அன்னார், காலஞ்சென்ற ஜெயரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
ராஜி (USA) அவர்களின் அன்புக் கணவரும்,
டாக்டர் விந்த்ய டாக்டர் வினோத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயராஜன்(Sydney), கிருபைராஜன்(Canada) , ஜெயமணி(Sydney) , தேவராஜன்(Sydney) ஆகியோரின் அன்புச் சகோதரரும்ஆவார்.
டாக்டர் பெஞ்சமின் ஜெயரட்னம் வெஸ்லி கல்லூரி மற்றும் செயின்ட் மைக்கேல் கல்லூரியின் பழைய மானவனும் ஆவார். பேராதனை பல்கலைக்கழகத்தில் BScபட்டம் பெற்றபின் இலங்கை /மகுந்தூராவில் விவசாயத் திணைக்களத்தில் பணியாற்றினார்.
பின்னர் அவர் உயிர்வேதியியல் துறையில் தனது முதல் கலாநிதி பட்டத்தையும் மற்றும் தோட்டக்கலைப் படிபில் இரண்டாவது கலாநிதி பட்டத்தையும் ஜோர்ஜிய பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்தார்..
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் MBAபடிப்பை முடித்துக்கொண்டு சனோஃபி அவெடிஸ் நிறுவனத்தில் உயிர் வேதியியல் இயக்குநராக பணிபுரிந்தார்.
அவர் முழுமையான வாழ்வை வாழ்ந்து, குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து தற்போது கர்த்தருடன் இருக்கிறார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கிரியை:
பிப்ரவரி 4 ந் திகதி காலை 10 மணிக்கு
42 பெயிலி வீதி, மட்டகளப்பு.
www.tamilthakaval.org
